Aandavarin Namamathai – ஆண்டவரின் நாமமதை

ஆண்டவரின் நாமமதை ஈண்டு போற்றுவேன் – அவர்
ஆளுகையின் நீதி அன்பின் வாழி சாற்றுவேன் – ஆண்
உத்தம வழியில் நிதம் புத்தி கொள்ளுவேன் – மன
உண்மையுடன் வாழ்ந்து தீய கன்மம் தள்ளுவேன் – ஆண்
கெட்ட விஷயங்கள் எனை ஒட்டுவதில்லை மதி
கேடரின் புரளிகளும் கிட்டுவதில்லை – ஆண்
வஞ்சகங்களை உகக்கும் நெஞ்சை நீக்குவேன் – பொல்லா
மார்க்கங்களிலே நடக்கும் தீர்க்கம் போக்குவேன் – ஆண்
மற்றவனை யேசி வாயால் குற்றங்கள் செய்யும் – துஷ்ட
மாந்தர் மேலே பற்றாமலென் பாந்தவம் நையும் – ஆண்
பொய்யர்களை என்னுடன் உய்ய ஒட்டேனே – மகா
புரளிசெய்யும் எத்தர்களின் திரளில் கிட்டேனே – ஆண்
சீருடையோர் பேரில் அன்பு கூருவேனே – நல்ல
சீரொழுகு சான்றோர் தயை சேருவேனே – ஆண்

Leave a Comment